|
கதிர்காமம் முன்வாசல் |
கதிர்காமம்
தென்னிலங்கையின் நடுப்பகுதியில், மலைகளும், காடுசூழ்ந்துள்ள இடத்தில்
மாணிக்க கங்கை தழுவிச் செல்லும் வனப்புறு திருநகரில்
எழுந்தருளியுள்ளார் கதிர்காமக்கந்தன்.இக்கந்தப் பெருமாள் காவல்
தெய்வம் என்பது ஆராய்சியாளர்களின் முடிவு. பிள்ளையார் மலை,
வீரபாகு மலை தெய்வானை மலை வள்ளியம்மை மலை ஆகிய
மலைகளின் நடுவே சந்திரன், சூரியன், அக்னியாகிய முச்சுடர்களின்
சோதி பெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிர
மலை. கதிரமலையில் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி
யுள்ளார் கதிகாமக்கந்தன் என்று தக்ஷனகைலாய புராணம் கூறுகிறது.
யாழ்பாண வைபவமாலை, மகாவம்சம் ஆகிய நூல்களில் கதிர்கா
மம் பற்றிய குறிப்புக்கள் உண்டு.கதிர்காமக்கந்தனின் சந்நிதி தெற்க்கு
நோக்கியும், வள்ளியம்மையின்சந்நிதி வடக்கு நோக்கியும், தெய்வானை
அம்மையின் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்திறுக்கின்றன. வள்ளி
அம்மையருக்கு அடிமை பூண்ட முத்துலிங்கசுவாமி சந்நிதி, மாணிக்க
கங்கையைக் கடந்துவரும் அடியார்களை அன்புடன் உபசரித்து முருக
னிடம் ஆற்றூப்படுத்தும் கருத்துடன் மேற்க்கு திசையை நோக்கி
அமைந்திருக்க்கிறது. அத்தோடு பக்க்தர்களால் வணங்கப்படும்பிள்ளை
யார், பெருமாள், வைரவர் ஆகியோருக்கான சந்நிதிகளும் இங்குண்டு.
பௌத்த வ்ழிபாட்டுக்கான கிரி விகாரையும்,இஸ்லாமியருக்கான பள்ளி
வாசலும் இங்கு இருப்பது நோக்கற்பாலது.
|
இன்றைய கதிர்காமம் இடமிருந்து வலமாக புத்தர் கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில் |
|
பாபாஜி 1800 வருடங்களுக்கு முன் தீட்சை பெற்ற கல்வெட்டு |
இந்த கல்வெட்டில் பொறிக்க பட்டுள்ள ஆங்கில வாசகங்கள்...
"At this sacred spot round about 219 A.D. in the sixteenth year Bala Babaji Nagaraj was initiated into yoga sidhantham by the great siddha of science Boganathar. Babaji experienced Muruga here and became aware of the fact that he is an Avatar of Muruga."
|
அன்றைய கதிர்காமம் பிள்ளையார் கோவிலும் முருகன் கோவிலும் மட்டும். |